9வது பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவின் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்க தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று (11) பிற்பகல் தெரிவுக்குழு கூடிய போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

