பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வொன்று முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் M.S.M. நவாஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கம்பஹா மாவட்டத்தில் திஹாரிய, மற்றும் மாபோல ஆகிய பிரதேசங்களில் அமீனியா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் மாபோல ஜூம்மா பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களில் 15.11.2025 ஆம் திகதி மற்றும் 16.11.2025 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மத விவகாரங்கள் மற்றும் கலாச்சார கௌரவ பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், மத விவகாரங்கள் மற்றும் கலாச்சார கௌரவ பிரதி அமைச்சர் M.M. முனீர் முளப்பர் அவர்களின் ஒருங்கிணைப்புச் செயலாளர் அல்ஹாஜ் L.I.A.M. சாஜஹான் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இச்செயலமர்வில் சுமார் 150 பள்ளி வாசல்களின் 300 க்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்த கருத்தரங்கில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள், பள்ளிவாசல் எவ்வாறு ஒரு சமூக மையமாக செயற்படுவது, இலங்கை வக்பு சபை, இலங்கை வக்பு நியாய சபை மற்றும் முஸ்லிம் தரும நம்பிக்கை பொறுப்புகள் (Trust) ஆகியன தொடர்பில் நம்பிக்கையாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டன.
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அறிமுகமும் அதன் சேவைகள் தொடர்பான தொடக்க உரையை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் M.S. அலா அஹ்மத் வழங்கியதுடன் மஸ்ஜித் நம்பிக்கையாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தெளிவுரையை வழங்கினார், வக்பு பிரிவின் அதிகாரி அஷ் ஷேக் M.I. முனீர், வக்பு நியாய சபை பதில் செயலாளர் M.N.M. ரோஸன், ஆகியோர் கலந்து கொண்டு தெளிவுரைகளை வழங்கினார்கள். மேலும் இந்த கருத்தரங்கினை வக்பு பிரிவு அதிகாரி M.I. மிஸார் தொகுத்து வழங்கினார்.
இந் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வினை முஸ்லிம் சமய பண்பாட்டால்கள் திணைக்களத்தின் கம்பஹா மாவட்ட பள்ளிவாசல்களின் பொறுப்பதிகாரி திருமதி பாத்திமா அவர்களுடன் கம்பஹா மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி ஆர். பர்வின் மற்றும் திருமதி நஸ்பியா ஆகியோர் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





