அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான ரூபா 50,000 கொடுப்பனவு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு ஆகியவற்றை வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அத்தனகல்ல பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொடுப்பனவு வழங்கப்படும் திகதிகள்:
* டிசம்பர் 26
* டிசம்பர் 27
* டிசம்பர் 29
* டிசம்பர் 30
தொடர்புடைய பயனாளிகளின் விண்ணப்பங்கள் கிராம உத்தியோகத்தர் ஊடாகப் பரிந்துரைக்கப்பட்டு பிரதேச செயலகத்திற்குக் கிடைக்கப்பெற்றிருக்க வேண்டும். அதன்பின்னர், மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து அதற்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் முற்பணங்கள் கிடைக்கப்பெற்றவுடன், மேற்கூறிய திகதிகளில் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று அத்தனகல்ல பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

