முஹம்மத் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கொழும்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'மீலாதுன் நபி' சமய மற்றும் கலாச்சார நிகழ்வு வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு மாநகர சபை கட்டடத்தின் மாநகர சபை உறுப்பினர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி மற்றும் மேல் மாகாண ஆளுநர் திரு. யூசுப் ஹனீப் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் கௌரவ மாநகர முதல்வர் விராய் கெலி பல்தசார், பிரதி மாநகர முதல்வர், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர ஆணையாளர் ஆகியோரின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


