2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கஹடோவிட்ய முஸ்லிம் பாலிக்கா மகா வித்தியாலய மாணவிகள் வரலாற்று சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளனர்.
பரீட்சைக்குத் தோற்றிய 27 மாணவிகளில் 10 மாணவிகள் (37%) வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று புலமைப்பரிசில் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
பரீட்சை எழுதிய அனைத்து மாணவிகளுமே (100%) 70 புள்ளிக்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்குப் பெரும் பெருமை சேர்த்துள்ளனர்.
இத்தகைய மகத்தான சாதனையைப் படைத்த மாணவிகளுக்கும், அவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் பாடசாலை நிர்வாகம், கிராம மக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

