யுத்தத்துக்கு பயந்து நாட்டை விட்டு தப்பிச் சென்றவரே கோதாபாய ராஜபக்ஷ என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அதனடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளரொருவர் களமிறக்கப்படுவாராக இருந்தால், அதற்கு தகுதியானவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா மாத்திரமே என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, யுத்தத்திற்கு பயந்து நாட்டை விட்டு அமெரிக்காவுக்கு ஓடிய கோத்தாபயவை விட சரத் பொன்சேகா மேலானவர் என்றும் குறிப்பிட்டார். 
நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புபடுத்தி நோக்கும் போது அவரே சிறந்த வேட்பாளராவார். எனினும் கடந்த தேர்தலில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்து விட்டார் என்ற கேள்வி எழத் தோன்றும். அவ்வாறு நோக்கினால் சி.டபில்யு.டபில்யு.கன்கங்கரா இலவச கல்வியை அறிமுகப்படுத்தி, இலவச கல்வியின் தந்தையாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். எனவே அதனைப் பெரிதுபடுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். 
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில், பிரச்சினை காணப்பட்ட போதிலும் கோதாபாய ராஜபக்ஷவை அந்தப் பொறுப்பில் அமர்த்த முடியாது எனவும் நாட்டின் பாதுகாப்பு குறித்து சரியான தீர்மானங்களை எடுக்கக்கூடிய ஆற்றல் சரத் பொன்சேகாவிடம் உண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.