( மினுவாங்கொடை நிருபர் )

   எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் தபால் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்த்துள்ள அரச சேவையிலுள்ளவர்கள், 2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவான பற்றுச் சீட்டுகளை தத்தமது கிராம சேவை உத்தியோகத்தர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும் என, தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
   அரச சேவை உத்தியோகத்தர்களுக்கு சுற்று நிருபம் மூலம் இது தொடர்பிலான  அறிவுறுத்தல்கள்  வழங்கப்பட்டுள்ளதாகவும், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பப் படிவங்களைப்  பூர்த்தி செய்வதற்கு,  அந்தப் பற்றுச்சீட்டு முக்கயமானது என்றும்,  தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.