மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு முப்பது வருடங்களின் பின்னர்  மறிச்சுக்கட்டி மக்கள்  தமது சொந்த இடத்திற்கு சென்று மீள்குடியேறிய போது வில்பத்து காட்டை அழித்து அங்கு சட்டவிரோதமாக  அவர்கள் குடியேறுகிறார்கள் என பெரும்பாலானவர்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள். ஆனால் இந்த வாதங்களை வரலாற்று ரீதியில் உடைத்தெறிந்த அடையாளத்தை தேடும் நிலைக்கு பிரதேச அரசியல் தலைமைகள் தள்ளப்பட்டார்கள். ஆனால் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை பொய் என உறுதியாக நிரூபிக்க உதவியது "மறிச்சுக்கட்டி முஹியத்தீன் பள்ளிவாசலாகும்". இந்த பள்ளிவாசல் கி.பி 1830 ஆண்டு காலத்தில் இமாமுல் அரூஸ் செய்யித் முஹம்மத் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டது.

இலங்கையின் வரலாற்றில் 365 பள்ளிவாசல்களையும் தைக்காக்களையும் அவர்கள் நிர்மாணித்தார்கள். இலங்கையின் நிலப்பரப்பில் மிக உயரமான இடமான நுவரெலிய மாவட்டத்தின் ஹபுகஸ்தலாவ பகுதியிலும் இலங்கையின் மிகவும் தாழ்வான இடமான மறிச்சுக்கடடியிலும் அவர்களே பள்ளிவாசல்களை நிர்மாணித்தார்கள்.

இந்த விடயத்தை அமெரிக்காவின் பசுபிக் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் அவர்கள் இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள்

The people of Sri Lanka are well aware that traveling to the remote places such as Marichikkaddi and Karadikkuli even in these days with modern transportation is very tiresome and dangerous, as the area is infested with wild animals and the roads are very difficult to track through. But, Imamul Arus managed to visit even such remote and dangerous areas 150 years ago and constructed mosques and schools in those desolate villages. This speaks of the selfless nature of all of his efforts in public causes.

Shuayb Alim, Dr.Tayka (1996). Arabic,Arwi and Persian in Serandib and Tamil Nadu. Madras: Imamul Arus Trust. p. 585,586.

(பஸ்ஹான் நவாஸ்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.