அமைச்சர் சுஜீவ சேனசிங்க  வீட்டில் நேற்று (20.08.2019) இரவு  இடம்பெற்ற  சஜித் பிரேமதாசவுடனான  விருந்தில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிகின்றன.

இந்த விருந்திற்கு ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் பலருக்கும் அழைப்பு வழங்கப்பட்டுள்ள அதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இருந்தும், அண்மையில் அமைச்சர் சஜித் பிரேமதாச "பௌத்த இராச்சியத்தை உருவாக்குவேன்" என தெரிவித்தார்.

சஜித்தின் இந்த தீவிர இனவாத கொள்கையைக் கண்டு  முஸ்லிம் உறுப்பினர்கள் அதிர்ப்திக்கு உள்ளாகியுள்ளனர். இதனாலேயே, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த விருந்துபசாரத்தை புறக்கணித்தாக கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.