( மினுவாங்கொடை நிருபர் )

   நாட்டின் பத்து  மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேற்கொள்ள சுகாதாரம், போஷணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

   கொழும்பு, கம்பஹா,  களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, புத்தளம், இரத்தினபுரி, கேகாலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இவ்விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

   இதன்பிரகாரம்,  31ஆம் திகதி முதல் நவம்பர் 6 ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு  அறிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.