2013 ம் ஆண்டு பாடசாலை தனியாக மாகாண பாடசாலையாக பிரிக்கப்பட்டு 7 ஆண்டுகளில் ஒன்றன் பின்  ஒன்றாக  தொடராக வெற்றி நடைபோடும் மே /மா /கள அல்முபாரக் கனிஷ்ட வித்தியாலயம் - மள்வானை  இவ்வருடமும் அதனது சிறந்த நிர்வாகம் மற்றும்  ஆசிரியர் குழாத்தின் அயராத அர்ப்பணம் பா.அ.ச. ஒத்துழைப்பு காரணமாக இன்னொரு காத்திரமான மைல்கல்லை எட்டி வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.

2019 ம் கல்வியாண்டில் நடைபெற்று முடிந்த தேசிய மட்ட மீலாத்   போட்டியில் ஆரம்ப பிரிவு பேச்சு போட்டி தமிழ் மொழிப்பிரிவில்
நாச்சியாதீவு பர்வீன்  -  பாத்திமா நஸ்மியா தம்பதியின் செல்வப் புதல்வி செல்வி பாத்திமா மர்யம்
  தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்றுக்கொடுத்து  பாடசாலைக்கும் ஊருக்கும் நிலையான பெருமையை புகழை தேடித்தந்தந்துள்ளார்.

பாடசாலை நிர்வாகம் ஆசிரியர் குழாம் பா.அ.ச. மற்றும் பெற்றோர் நலன்விரும்பிகள் சார்பாக  அவரை மனதார வாழ்த்துகின்றோம்.
பிரார்த்திக்கின்றோம்.


பாடசாலை நிர்வாகம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.