அமைச்சர் டலஸ் அழகப்பெறும தனது அமைச்சுப் பதவிக்கு உரித்தான ஏப்ரல் மாத சம்பளத்தையும் அமைச்சர் காமினி லொக்குகே 10 மில்லியன் ரூபாவையும் இன்று (06) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் அன்பளிப்பு செய்தனர்.
Ø நிதியத்தின் வைப்பு மீதி 380 மில்லியனாக அதிகரிப்பு
இரண்டு நாட்களில் கொவிட் 19 சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபா அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
314 மில்லியன் ரூபாவாக இருந்த மீதி தற்போது 380 மில்லியனாக அதிகரித்துள்ளது.
தேசிய லொத்தர சபை 25 மில்லியன் ரூபாவையும், தேசிய சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியல் சங்கம் ஆகியன தலா 2.5 மில்லியன் ரூபாவும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு 02 மில்லியன் ரூபாவையும், மெலிபன் பிஸ்கட் மெனுபெக்சரீஸ் நிறுவனம் 10 மில்லியன் ரூபாவையும், மாத்தறை பௌத்த பாதுகாப்பு சபை ஒரு மில்லியன் ரூபாiவுயும் நேசர்ஸ் பியுட்டி கிரியேசன்ஸ் நிறுவனம் 5 மில்லியன் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.
இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.
0112354479,011354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.
மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.04.06