மதுவின்றியும் வாழ்கிறார்கள் சில குடிமக்கள்...
புகைக்காமலும் இயற்கை தேவைகளை நிவர்த்தி செய்கிறார்கள்....
சில்லறை வலிகளுக்கு கிவ் நின்று வைத்தியரை சந்திக்கும் கூட்டம் வீட்டில் பாட்டி வைத்தியத்திலும் சுகம் கண்டனர்...
மனைவி பாதி மனநோயாளி ஆனதன் காரணம் பல கணவன்மார்கள் கண்மணி ஊடாகவே கண்டுகொண்டனர்...
நாவை விட பசிக்கு தான் வலிமை அதிகம் என்பதை பருப்பும் செமனும் உணர்திவிட்டது...
வீட்டில் உள்ள பொருட்களின் இடம் பொருள் காலம் கணவன்மார்களுக்கு புரிந்து விட்டது...
மொத்தத்தில் கொரோனா பலரை கனவுலகில் இருந்து நிஜத்துக்கு கொண்டு வந்துவிட்டது.

மாஹிரா சிராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.