கொரோனா வைரஸ்: நிவாரணம் வழங்க தனியாருக்கு அனுமதி - தி.மு.க. தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு

  Fayasa Fasil
By -
0
Mkstalin
நிவாரணப் பணிகளைத் தனியார் அமைப்புகள் வழங்கக்கூடாது என தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட உத்தரவை எதிர்த்து, தி.மு.க. தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்த நிலையில், தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவே நிவாரண உதவிகளைச் செய்யவேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது.
இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த தி.மு.க. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தது. இந்த வழக்கு அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு நீதிபதிகள் சுப்பைய்யா, பொங்கியப்பன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில், தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணனும் தி.மு.க. தரப்பு வழக்கறிஞர் வில்சனும் முகக் கவசம் அணிந்து வாதாடினர். 
BBC - Tamil 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)