அக்ரஹார காப்புறுதி பயன்களை இதுவரையில் கொண்டிராத ஓய்வு பெற்ற 600,000 இலட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி பயன்களை வழங்குவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதற்கு அமைவாக நேற்யை தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது பிரதமர் இதற்கான பரிந்துரையை முன்வைத்தார். அமைச்சரவையினால் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் பின்வருமாறு:

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்க சேவையில் ஓய்வுபெற்ற ஓய்வூதியக்காரர்களுக்கான அக்ரஹார காப்புறுதி முறைக்கு உள்ளடக்கப்படக்கூடிய நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் ஓய்வூதியக்காரர்களில் பெரும்பாலானோர் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்க சேவையில் ஓய்வுபெற்றவர்களாக இருப்பதினால் அவர்களையும் அக்ரஹார காப்புறுதி முறைக்குள் உள்வாங்கப்படுவதற்கு வசதிகள் செய்யுமாறு ஓய்வூதியக்காரர்களின் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, தற்பொழுது 2016 ஜனவரி மாதம் 01ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மாத்திரம் உரித்தாகியுள்ள அக்ரஹார பயன்கள் அந்த தினத்திற்கு முன்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கும் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் திறனாற்றல் அபிவிருத்தி தொழில்வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் அவர்களினாலும் அரச நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பரிந்துரை நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் அவர்களினால் வழங்கப்பட்ட உடன்பாட்டை கவனத்தில் கொண்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது.

இதேபோன்று நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை கவனத்தில் கொண்டு கீழ் கண்ட வகையில் செயல்ப்படுவதற்காக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• அக்ரகார காப்புறுதி பரிந்துரை முறையின் கீழ் அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஓய்வுபெற்றவர்களுக்கும் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தரமான சிறப்பான சுகாதார சேவை வசதிகளை வழங்குவதற்காக அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் அரசாங்கத்தின் அனைத்து முக்கிய வைத்தியசாலைகளில் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியகாரர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்ட் தொகுதி ஒன்றை முன்னெடுப்பதற்காக பொருத்தமான முறையொன்றை வகுத்தல்

• அரச சேவையில் ஓய்வுபெற்ற ஓய்வூதியகாரர்களுக்கு மத்தியில் ஓய்வூதிய சம்பள முரண்பாடு மேலும் நீடிப்பது அவதானிக்கப்படுவதுடன் இந்த முரண்பாடுகளை சரி செய்வதற்காக பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிக்குமாறு தேசிய சம்பள ஆணைக்குழுவிடம் கோருகின்றோம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.