சற்று முன்னர் ஒரு கொவிட் மரணம் நிகழ்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் எனவும், கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (04) மரணமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனையடுத்து நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்வடைந்துள்ளது.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.