நேற்றைய தினம் (09) 697 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 30,074 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 357 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 219 பேரும், கண்டி மாவட்டத்தை சேர்ந்த 38 பேரும் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் வௌிநாட்டில் இருந்து வந்த மூவரும் கொவிட் தொற்றாளராக இனங்காணப்பட்டிருந்தார்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 26,512 ஆக அதிகரித்துள்ளது .

இதேவேளை, நேற்று நாட்டினுள் மேற்கொள்ளப்பட்ட 14,336 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.