நேற்றைய தினம் 522 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர நேற்று கொவிட் தொற்று இனங்காணப்பட்ட 206 பேர் கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்து இனங்காணப்பட்டுள்ளனர். 

மேலும் கம்பஹா மாவட்டத்தில் இருந்து 97 பேரும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 81 பேரும் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் 11 மாவட்டங்களில் இருந்து இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இதுவரை நாட்டில் பதிவான தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 46,248 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.