ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் பிரதமர் தலைமையில் இன்று நண்பகல் (12 மணிக்கு) இடம்பெறும் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும சற்று முன்னர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக கடந்த 90 நாட்களாக தொடர்ந்துவரும் தொழிற்சங்க போராட்டம் குறித்து இன்று (12)நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியராளர்களுடனான சந்திப்பின்போதே அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.

இன்று எட்டப்படும் சுமுகமான தீர்வை அடுத்து மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பதில் எந்தவித தடையும் இருக்காது என்றும் அமைச்சர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.