நாட்டில் ஒரு புத்திசாலி அரசாங்கமல்லாமல் ஒரு பேரிடர் அரசாங்கமே உள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேசபக்தி,தேசிய அடையாளம்  போன்ற அனைத்தும் டொலர் நோட்டுகளுக்கு முன்னால் சிதறுண்டு போயுள்ளதாகவும் கூறிய எதிர்க் கட்சித் தலைவர்,வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன் அரசாங்கம் மண்டியிட்டுள்ளது எனவும் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) அம்பலாந்தோட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் திரிசிங்க காமினி இதனை ஏற்பாடு செய்திருந்தார்.இந்நிகழ்வில் முன்னால் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாராய்ச்சி,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தென்னகோன் நிலமே மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பிரதேசவாசிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இன்று மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளையும் உருவாக்கியவர் அரசாங்கமே என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர்,அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டின் விளைவுகளை மக்கள் அனுபவிக்க நேரிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நாட்டின் அப்பாவி விவசாயிகள் தரமான உரத்தையே கோருகின்றனர் என்று கூறிய எதிர்க் கட்சித் தலைவர்,மாறாக உரத் துக்கத்தை அரசாங்கமே உருவாக்கியுள்ளதாகவும்,இந்த உர மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு இந் நாட்டின் விவசாயிகளுக்கு நீதி வழங்கும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கும் என்றும் அவர் கூறினார். 








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.