மேல் மாகாண பாடசாலைகளில் 9,10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான பரீட்சைகளை முன்னர் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த திகதிகளிலேயே நடத்த முடியும் என மேல் மாகாண கல்வி பணிப்பாளர் ஸ்ரீ லால் நொனிஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த தரங்களுக்கான பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு கடதாசி இல்லாத காரணத்தினால் பரீட்சைகள் பிற்போடப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனினும், பரீட்சை வினாத்தாள்களை, அச்சிடுவதற்கு தேவையான கடதாசி வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

9 மற்றும் 10ஆம் தரங்களுக்கான வினாத்தாள்கள் வலய மட்டத்தில் அச்சிடப்படவுள்ளதுடன், 11ஆம் தரத்திற்கான வினாத்தாள்கள் மேல் மாகாண திணைக்களத்தில் அச்சிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னர் தீர்மானிக்கப்பட்ட வகையில், எதிர்வரும் 29ஆம் திகதி தவணை பரீட்சை நடத்தப்படவுள்ளது.

Tamil Mirror

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.