கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை எடுத்து வந்து கட்டிலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இதன் பின்னர் அவரை கைது செய்துள்ளதாக வெல்லவிடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளார்.

54 வயதான அவர் மாலம்பேயில் வசிப்பவராவார்.

ஜூலை 09 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பொதுமக்கள் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமித்ததையடுத்து குறித்த நபர் கொடியைத் திருடியுள்ளார்.

இந்நிலையில், அந்த நபர் தனது இடுப்பில் கொடியைக் கட்டிக்கொண்டு நடமாடுவதைக் காட்டும் சிசிடிவி காட்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதன்பிறகு, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில், அந்த நபர் கொடியை படுக்கை விரிப்பாகப் பயன்படுத்தியதாகவும், அதை எரித்து அழிக்கவும் நினைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகள் மூலம் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நபரை பிடிக்க பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.