கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான சுமார் 720,000 திரிபோஷா பொதிகள் தயாரிக்கப்பட்டுளளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவற்றை சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக, இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்தடன், எதிர்வரும் சில வாரங்களில் குழந்தைகளுக்கு தேவையான திரிபோஷாவை உற்பத்தி செய்ய முடியும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.