⏩ பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டத்திற்கு நியூசிலாந்தின் முழு ஒத்துழைப்பு...

⏩ நியூசிலாந்து சுற்றுலா பயணிகள் மத்தியில் இலங்கையை ஒரு கவர்ச்சிகரமான  சுற்றுலா நிலையமாக மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம்...

பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் தற்போதைய வேலைத் திட்டத்திற்கு நியூசிலாந்து தன்னுடைய முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டன் (Michal Appleton) ஆகியோருக்கு இடையில் வெள்ளிக்கிழமை (9) ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது பற்றி தெரிவிக்கப்பட்டது. இப் பேச்சுவார்த்தை பாராளுமன்றத்தின் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் அலுவலகத்தில் நடந்தது.

இலங்கையின் நட்புறவு நாடாக இந்த நாட்டு மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கு எப்பொழுதும் நியூசிலாந்து தயாராக இருப்பதாக நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியூசிலாந்து உயர் ஸ்தானிகரிடம் நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு மத்தியில் இலங்கையை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலா மையமாக மேம்படுத்த வேண்டும் என்று.கேட்டுக் கொண்டார். அதற்கு தனது உடன்பாட்டை தெரிவித்த உயர் ஸ்தானிகர் ஏற்கனவே அது சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

தற்போதைய அரசின் நிலை பற்றி உயர் ஸ்தானிகருக்கு இங்கு தெளிவுபடுத்திய ஆளும் கட்சியின்  பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கும் பொழுது புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதோடு நாட்டுக்குள்.அரசியல் ஸ்தாவரத் தன்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாட்டு மக்கள் முகம் கொடுக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடுவதற்காக ஜனாதிபதியின் பிரதான பணியாக இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தற்போதைய பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை வைத்திருக்கின்ற இலங்கை பொதுஜன பெரமுன தம்முடைய பூரண ஆதரவை ஜனாதிபதிக்கு கொடுப்பதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் தமது கட்சி புரிந்துணர்வோடு செயற்படுவதாகத் தெரிவித்த அமைச்சர் சர்வ கட்சி ஆட்சி ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி பேச்சுவார்த்தை ஆரம்பித்திருப்பதாகவும் சகல கட்சிகளையும் இணைத்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் உயர் ஸ்தானிகர் அவர்களுக்கு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் ஆளும் கட்சியின் பிரதான அமைப்புச் செயலாளர் சமிந்த குலரத்னவும் கலந்து கொண்டார்.


முனீரா அபூபக்கர்

2022.09.11



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.