இலங்கையின் தென் கிழக்குத் திசையில் காணப்பட்ட வளிமண்டலவியல் தளம்பல் நிலையானது தீவிரமடைந்தது ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக மாறியுள்ளது. இது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் மேலும் விருத்தியடைய்கூடும்.  ஆனபடியினால் நாட்டின் அனேகமான இடங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும். 

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில்  பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு,  கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின்  சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது. 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய  சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் 
****************************

இலங்கையின் தென் கிழக்குத் திசையில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளது.  இது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் மேலும் விருத்தியடைவதுடன் இலங்கையின் வட கரையை நோக்கி வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனபடியினால் மட்டக்களப்பு  தொடக்கம்  திருகோணமலை, காங்கேசன்துறை  ஊடாக மன்னார்  வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற  கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு,திருகோணமலை, காங்கேசன்துறை  ஊடாக மன்னார்  வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து  காற்று வீசும். 

பொத்துவில்  தொடக்கம் மட்டக்களப்பு, திருகோணமலை, காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம்  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக்  காணப்படும்.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக மன்னார்  வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.0 ‐ 2.5 m உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்தகாற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.