ரஷ்யா தனது எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக தெரிவித்ததை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.

இதன்படி, கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை ஒரே நாளில் 2.94 டொலர்கள் (3.63%) அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.72 டொலர்களாக தற்போது பதிவாகியுள்ளது.

அமெரிக்க டபிள்யூ.டி.ஐ. எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 2.07 (2.67%)டொலரால் அதிகரித்ததை அடுத்து தற்போது ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 79.56 டொலர்களாக பதிவாகியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு விடையளிக்கும் வகையில், மேற்கத்திய நாடுகளின் G-7 குழு ரஷ்ய கச்சா எண்ணெய் மீது 60 டொலர் அதிகரித்து உச்சவரம்பை விதித்தது.

மற்றும் அதற்கு பதிலடியாக ரஷ்யா தனது தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 500,000 முதல் 700,000 பீப்பாய்கள் வரை குறைக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.