இங்கிலாந்தின் முன்னணி நாளிதழ் ‘டெய்லி மெயில்’ குறைந்த செலவில் சிறந்த விடுமுறைப் பெக்கேஜ்களை வழங்குவதால், உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறது.

டெய்லி மெயிலின் மேரி வேல்ஸ் சுட்டிக்காட்டியுள்ளபடி, இலங்கை இப்போது வழங்கும் ஆடம்பர பயணப் பெக்கேஜ்களைப் பெறுவதற்கு சுற்றுலாப் பயணிகள் மிகக் குறைவாகச் செலவழிக்கும் வாய்ப்பைப் பெறுவது அரிது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிர்ப்பு மற்றும் உணவுப் பற்றாக்குறை அச்சம் காரணமாக பிரித்தானியா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால், தற்போது அந்த எச்சரிக்கை அறிவிப்புகளை பிரிட்டன் அரசு திரும்பப் பெற்றுள்ளது. அவர்கள் தங்கள் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருமாறு ஊக்குவிக்கின்றனர்.

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு விஜயம் செய்வது நிச்சயமாக இலகுவானது என டெய்லி மெயில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு 36 மணித்தியாலங்களுக்குள் விசாக்களை டிஜிட்டல் முறையில் பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டிய அந்த நாளிதழ், அதன் புகழ்பெற்ற கடற்கரைகள் மற்றும் சிறந்த விருந்தோம்பல்களுடன் இலங்கைக்கு விஜயம் செய்வதைத் தவறவிட வேண்டாம் என பிரித்தானிய வாசிகளுக்கு மேலும் அழைப்பு விடுத்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.