LPL 2022: கண்டியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது கொழும்பு ஸ்டார்ஸ்

லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் தீர்மானமிக்க போட்டியொன்று இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றது.

ஜப்னா கிங்ஸ் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ள அணி எது என்பதை தீர்மானிக்கும் போட்டியே இன்று இடம்பெற்றிருந்தது.

அதற்கமைய, கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கண்டி பெல்கொன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி பெல்கொன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக வனிந்து ஹசரங்க 77 ஓட்டங்களையும், அஷேன் பண்டார 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

கொழும்பு அணியின் பந்துவீச்சில் கசுன் ரஜித்த 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இதனையடுத்து, 169 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 18.5 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.

கொழும்பு அணி சார்பாக சரித் அசலங்க 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு, தினேஸ் சந்திமல் 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனூடாக, நாளை (23) இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணியுடன் கொழும்பு ஸ்டார்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.