கஹட்டோவிட்ட முபாரக் மௌலானா தக்கியா மற்றும் கஹட்டோவிட்ட நபவிய்யா இளைஞர் இயக்கம் ஏற்பாட்டில் எதிர் வரும் திங்கட்கிழமை பி.ப 2.30 மணி முதல் க‌ஹட்டோவிட்ட முபாரக் மௌலானா தக்கியா வளாகத்தில் இருந்து போதைப் பொருளுக்கு எதிராண பேரணி ஒன்று நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் போதைப் பொருளுக்கு எதிரான அனைவரும் ஒன்று திரண்டு ஊரில்  பரவி வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கு எதிராக அணி திரளுமாறும் ஊரில் இருந்து போதையை முற்றாக போதைப்பொருளை இல்லாதொழிக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் கஹட்டோவிட்ட முபாரக் மௌலானா தக்கியா மற்றும் கஹட்டோவிட்ட நபவிய்யா இளைஞர் இயக்கத்தினர்   கோரிக்கை விடுத்துள்ளனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.