ஆசிரியர் இடமாற்று சபை பற்றிய முக்கிய தீர்மானம் இன்று..

ஆசிரியர் இடமாற்ற சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

ஆசிரியர் இடமாற்றச் சபையை இடைநிறுத்துவது மற்றும் கலைப்பது தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் இடமாற்றச் சபையை இடைநிறுத்தி கலைத்தமைக்கு தாம் கடும் எதிர்ப்பை தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்தை மீளப்பெறாவிடின் எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.