நம்ப முடியாத வகையில் இறுதிப் பந்தில், வெற்றியீட்டியது சென்னை சுப்பர் கிங்ஸ்

ஜடேஜா - தூம்பே கை கொடுக்க ஐபிஎல் கிண்ணத்தை வென்றது சென்னை
ஜடேஜா - தூம்பே கை கொடுக்க ஐபிஎல் கிண்ணத்தை வென்றது சென்னை

 16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெற்ற நிலையில் 5 வது முறையாக ஐபிஎல் கிண்ணத்தை வென்றது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி.



அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இடம்பெறும், இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் சென்னை அணி வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்து.



இதற்கமைய, முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.



அணிசார்பில் அதிகபடியாக சாய் சுதர்ஷன் 96 ஓட்டங்களையும், ரித்திமான் சஹா 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.



சாய் சுதர்ஷன் 47 பந்துகளுக்கு முகங்கொடுத்து 8 நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 96 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.



பந்துவீச்சில் சென்னை அணியின் தீபக் சஹார் ஒரு விக்கெட்டையும், ரவிந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும், மத்தீஷ பத்திரண இரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.



இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 04 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.



இந்தநிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 215 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட களமிறங்கியது.



இதற்கிடையில் மழை குறுக்கிட்டதால் டக்வர்த் லூவிஸ் முறைப்படி சென்னை அணி வெற்றிபெற 15 ஓவர்களில் 171 ஓட்டங்களைப் பெற வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் 4 ஓவர் பவர் ப்ளே விளையாடப்படும். ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக 3 ஓவர்களை வீசலாம் என்றும் கூறப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.