பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் பயணிகள் பஸ்ஸூடன் மோதி விபத்து; 13 பேர் காயம்

TestingRikas
By -
0

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் பயணிகள் பஸ்ஸூடன் மோதி விபத்து; 13 பேர் காயம்

பண்டாரவளை  - தியத்தலாவ பிரதான வீதியின் கஹகொல்ல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ், பயணிகள் பஸ்ஸூடன் மோதி இன்று (16) காலை விபத்திற்குள்ளானது. 

காலை 7.10 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் 9 மாணவர்கள் உள்ளடங்கலாக 13 பேர் காயமடைந்த நிலையில், தியத்தலாவ வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆசிரியர் ஒருவரும், இரண்டு பஸ்களின் சாரதிகளும் நடத்துனர் ஒருவரும் காயமடைந்தவர்களில் உள்ளடங்குகின்றனர். 

இரண்டு பஸ் சாரதிகளினதும் கவனக்குறைவினால் விபத்து சம்பவித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)