150 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு
 


இலங்கையின் தென்மேற்கு பகுதியில் பலத்த மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று இரவு களுத்துறை மாவட்டத்தில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும் பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது, தற்காலிக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.