தக்காளி சாற்றை சுவைத்தவருக்கு ரூ. 4 கோடி இழப்பீடு
 
ஜப்பானை சேர்ந்த இளைஞர் தக்காளி சாற்றை சுவைத்தமையால் ஏராளமான பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய உணவகம் தனது வழக்கமான வியாபாரத்தை இழந்து தவிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. அகின்டோ சுஷிரோ என்ற உணவகத்தை ஃபுட் அன்ட் லைஃப் நிறுவனம் நடத்தி வருகிறது.
இந்த உணவகத்தில் கடந்த ஜனவரி 3 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வு தான் எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் ஆகும்.
இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை கன்வேயர் பட்டி மீது வைக்கப்பட்டு அதன் பின் மோட்டார் மூலம் இயக்கப்பட்டு அவர்களின் மேசைக்கு அனுப்பப்படுகிறது.
மேலும் இந்த உணவகத்திற்கு வந்த இளைஞர் அங்கு வைக்கப்பட்ட தக்காளி சாற்றை , தேனீர் கோப்பை, கன்வேயர் பட்டியில் இருந்தவற்றை எல்லாம் சுவைத்தார்.
மேலும் இவை அனைத்தையும் அவர் காணொளியாக பதிவு செய்தார். இந்த காணொளி சுஷி டெரரிசம் என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதன் காரணமாக அகின்டோ சுஷிரோ உணவகத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. வியாபாரம் வீழ்ச்சி அடைந்தது, அதனை தொடர்ந்து இது சம்பந்தப்பட்ட இளைஞர், தங்களுக்கு ரூ. 4 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அகின்டோ சுஷிரோ வலியுறுத்தி வழக்கு பதிவு செய்து இருக்கிறது.
சம்பவம் தொடர்பாக பொது வெளியில் மன்னிப்பு கோரிய இளைஞர், காணொளி பரவலாக ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்யவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கன்வேயர் பட்டி மூலம் உணவு வழங்கி வரும் மற்ற உணவகங்கள், இது போன்ற நடவடிக்கைகளை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்தது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.