வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை


லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் மட்டுக்கலை பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைபட்டது.

இதனையடுத்து லிந்துலை பொலிஸாரும்  அப்பிரதேச வாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்

குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததால் சுமார் இரண்டு  மணித்தியாலயத்திற்கு மேல், போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதனால் ஹட்டன், தலவாக்கலை , நுவரெலியா ஆகிய பகுதிகளுக்கு சென்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியமை குறிப்பிடத்தக்கது .

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.