தேசிய வீடமைப்பு ஆணையாளராக சிரேஷ்ட சட்டத்தரணி காமினி பெரேரா இன்று (14)  பத்தரமுல்லை செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வளாகத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

இங்கு சமய அனுஷ்டானங்களை அத்துல்கோட்டே ஸ்ரீபரகும்ப பிரிவேனவின் கலாநிதி உடுகலகண்டே ஆரியரதன தேரர் மற்றும் அதே பிரிவேனவைச் சேர்ந்த ரிதிபெடிஎல்லே பஞ்சாசர தேரர் ஆகியோர் மேற்கொண்டனர்.

சிரேஷ்ட சட்டத்தரணி காமினி பெரேரா உச்ச நீதிமன்ற சட்டத்தரணி என்பதுடன் அவரது சட்டத்தரணி வாழ்க்கைக்கு சுமார் 30 வருடங்கள் ஆகின்றன. அவர் அமெரிக்க சட்டத்தரணி அசோசியேஷன் உறுப்பினராகவும் உள்ளார். மனித உரிமைகள் மையத்தின் பணிப்பாளராகவும், மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளராகவும் (போக்குவரத்து) பதவி வகித்துள்ளார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள ஓஷன்வியூ டெவலப்மென்ட் நிறுவனத்தின் இயக்குநராகவும் பணிபுரி ந்துள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த, பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) அனோமா விஜேரத்ன, பணிப்பாளர் நாயகம் (பொறியியல் சேவைகள்) வஜிரா அபேவர்தன மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டனர்.


முனீரா அபூபக்கர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.