2025ஆம் ஆண்டுக்குரிய (2026 இல் நடைபெறவுள்ள) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான கால அட்டவணையை இலங்கை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, பரீட்சைகள் எதிர்வரும் 2026 பிப்ரவரி 17ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
மாணவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்:
பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலின்படி, பரீட்சை மண்டபத்திற்குள் பின்வருவனவற்றைக் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கணிப்பான்கள் (Calculators)
- அழிப்பான் திரவம் (Correcting Fluid)
- கைத்தொலைபேசிகள் மற்றும் ஏனைய இலத்திரனியல் சாதனங்கள்.
இந்த விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.


