இந்திய மண்ணில் 3-2 எனும் கணக்கில் ஆஸி. அணி இந்தியா அணியை வெற்றி கொண்டு ஒரு நாள் தொடரை கைப்பற்றியது.

புதுடில்லியில் நடைபெற்ற ஐந்தாவதும் இறுதியுமான, தொடரை தீர்மானிக்கும் போட்டியில் ஆஸி. அணி 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஏற்கனவே இந்திய அணியுடனான இருபதுக்கு 20 தொடரையும் ஆஸி. அணி கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் தோல்வியடைந்ததன் பின்னர் ஓர் அணியொன்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றிய ஐந்தாவது சந்தர்ப்பமாக இது பதியப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.