உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் மினுவாங்கொட, ஹெட்டிப்பொல உள்ளிட்ட சில பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையினால் சேதமடைந்த சொத்துக்களின் எண்ணிக்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. 


சேதமடைந்த சொத்துக்களுக்கு நஷ்டஈடுகளை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முழுமையாக பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடுகள் வழங்கும் அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆனந்த விஜயபால தெரிவித்தார். 

இச் சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பத்துப் பேர் காயமடைந்துள்ளார்கள் என்றும் அந்த அலுவலகத்தின் பணிப்பாளர் தெரிவித்தார். 

முழுமையாக இழப்பீட்டை வழங்குவதற்கு முன்னர் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக முற்பணக் கொடுப்பனவைச் செலுத்துமாறு அரசாங்கம் இந்த அலுவலகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது. 

இது தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் 0112 57 58 03 அல்லது 0112 57 58 13 அல்லது 0112 57 58 26 என்ற தொலைபேசியின் ஊடாக இந்த அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்று பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். 

(அரசாங்கம் தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.