ஜா எல, சுதுவெவ பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட போதை பொருள் அடிமைக்குள்ளான கொரோனா நோயாளியினால் முழு நாட்டுக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த நோயாளி கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார். அன்றைய தினம் இரவு பமுனுகம பொலிஸ் பிரிவில் வைத்து இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் போதைப் பொருளுக்கு அடிமையாகிய ஒருவராகும்.

திருட்டு சம்பவம் ஒன்றிற்கு சென்ற சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பமுனுகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் சில நோய் நிலைமையில் காணப்பட்டமையினால் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இந்த தனது அருகில் இருப்பவர்கள் குறித்து சிந்திக்கவில்லை. அவர் போதை பொருளுக்கு அடிமையாகியமையினால் அவற்றினை குறித்து சிந்திக்கவில்லை.

எனினும் இறுதியில், தென்கொரியாவின் 31வது பெண் நோயாளி போன்றாகிவிட்டார். குறித்த பெண் தனக்கு கொரோனா நோய் தொற்றியிருந்த நிலையில் 9000 பேர் பங்குபற்றி தேவாலய ஆராதனையில் கலந்து கொண்டர். அவர்களில் 3000 பேர் இந்த நோய் தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

இந்த நிலைமையும் அவ்வாறு தான் உள்ளது. இந்த நோயாளி கைது செய்யப்பட்ட பின்னர் 12 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

முழு கிராமத்தையே முடக்க நேரிட்டது. இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தங்கள் கடமையை சரியாக செய்துள்ளனர். எனினும் 206வது நோயாளியினால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(வேது)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.