தீர்மானமிக்க எதிர்வரும் இரண்டு வாரங்களில் பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


பிறக்கவிருக்கும் தமிழ் சிஙகள புத்தாண்டு மற்றும் கொரோனா தொற்று தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் புதுவருடத்தில் பொறுப்புடன் செயற்பட்டு, நாடு முகங்கொடுத்துள்ள அபாயத்தை குறைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார் .
குறிப்பாக புதுவருட நிகழ்வுகளை வீட்டிலிருந்தே மேற்கொள்ளுமாறும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.
பொறுப்புடன் ஒவ்வொருவரும் செயல்படும் பட்சத்தில் கொரொனா வைரசு பிடியில் இருந்து விடுபட்டு பிரச்சினை இல்லாமல் எதிர்காலத்தில் பயணிக்க முடியும். இல்லையேல், பல இக்கட்டான நிலைமைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும். இந்த நிலையில், நாட்டின் எதிர்காலம் தொடர்பில் மிக முக்கிய பொறுப்பு பொதுமக்களிடம் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.