நாட்டில் இன்று (15) மேலும் 05 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

எனவே கொவிட் தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களது விபரம்:

  1. கொழும்பு 13, ஜிந்துபிட்டியை சேர்ந்த 54 வயது ஆண் ஒருவர் தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். நீண்ட காலமாக புற்றுநோயல் பாதிக்கப்பட்டு வந்த இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  2. கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய ஆண். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணித்துள்ளார். மரணத்திற்கான காரணம் புற்று நோய் மற்றும் கொவிட் நியுமோனியா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. கொழும்பு 12 பிரதேசத்தினை சேர்ந்த 88 வயதான ஆண். நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  4. கொழும்பு 08 பொரல்ல பிரதேசத்தை சேர்ந்த 79 வயதான ஆண் என்பதுடன் அவர் வீட்டிலேயே மரணித்துள்ளார். இவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  5. கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 88 வயதுடைய ஆண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது மரணமடைந்துள்ளார்.இவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.