Update : 

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவரது ராஜினாமா கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Siyane News)





முன்னைய செய்தி:

இராஜாங்க அமைச்சர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு லொஹான் ரத்வத்தவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் கடுமையாக அழுத்தங்களை கொடுத்துள்ளதாக தமிழ் மிரர் ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

இத்தாலியிலிருந்து தொலைபேசியின் ஊடாக லொஹான் ரத்வத்தவை தொடர்பு கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் பதவியை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார்.

விசாரணைகள் நிறைவடையும் வரையிலும் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பணித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.