புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகும் தேசிய அடையாள அட்டை

zahir
By -
0


ரிஹ்மி ஹக்கீம் 

தற்போதைய தேசிய அடையாள அட்டையானது பல புதிய மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவிக்கையில்,

“நாட்டில் தற்போது ​​தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்காக பொதுவான தரவுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பயோமெட்ரிக் தரவுகளை இனிமேல் அடையாள அட்டைகளில் சேர்க்கப்பட வேண்டும். அதற்கமைய, பயோமெட்ரிக் தரவுகளை இணைத்து டிஜிட்டல் அடையாள அட்டை கட்டமைப்பை தயாரிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

"அத்துடன், உதாரணமாக நமது கைரேகைகள், இரத்தம் தொடர்பான விபரங்கள், கண் தரவுகள் ஆகியவற்றையே பயோமெட்ரிக் தரவு என்கிறோம்.

எதிர்காலத்தில், இந்த பயோமெட்ரிக் தரவை சேர்த்து தேசிய அடையாள அட்டையை வழங்கத் தொடங்குவோம். தற்போது, ​​இது இந்திய உதவியின் கீழ் உள்ளது, இப்போது அனைத்து விடயங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

அதற்கமைய நாங்கள் அனைவரும் மீள் பதிவு செய்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)