தினேஸ் குணவர்தனவினால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று முன்தினம் (08) வழங்கப்பட்டன. பாராளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் சாகர காரியவசம் எம்.பியும் இணைந்து கொண்டார்.

இதன்படி, 18 மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதுடன், நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வருமாறு:

  1. கொழும்பு – பிரதீப் உந்துகொட
  2. கம்பஹா – சஹான் பிரதீப் விதான
  3. களுத்துறை – சஞ்சீவ எதிரிமான்ன
  4. காலி – சம்பத் அத்துகோரள
  5. மாத்தறை – நிபுன ரணவக்க
  6. அம்பாந்தோட்டை – சமல் ராஜபக்ஷ
  7. குருணாகல் – சமந்திரிய ஹேரத
  8. புத்தளம் – சிந்தக மாயாதுன்னே,
  9. அனுராதபுரம் – எச். நந்தசேன
  10. கண்டி – குணதிலக்க ராஜபக்ஷ,
  11. மாத்தளை – நாலக பண்டார கோட்டேகொட
  12. நுவரெலியா – எஸ்.பி. திஸாநாயக்க
  13. பதுளை – சுதர்சன தெனிபிட்டிய
  14. மொனராகலை – குமாரசிறி ரத்நாயக்க
  15. இரத்தினபுரி – அகில எல்லாவல
  16. கேகாலை – ராஜிகா விக்கிரமாசிங்க,
  17. திகாமடுல்ல – டி. வீரசிங்க,
  18. திருகோணமலை – கபில அத்துகோரள

ஆகியோர் நியமனக்கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.