நேற்று(03) முதல் அமுலாகும் வகையில் கொத்து ரொட்டியின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மற்றும் தற்போதுள்ள கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொத்து ரொட்டியின் விலை 100 ரூபாயாலும் பராட்டா, ரொட்டி மற்றும் ரோல்ஸ் ஆகியவற்றின் விலைகள் 10 முதல் 15 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.