வன்முறையை கடை பிடித்தவர்களே வன்முறைக்கு எதிராக செயல்படுவதாக கூறிக் கொள்கிறார்கள்.
தமித்தாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பினார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ
நடிகை தமிதா அபேரத்ன தன்னிச்சையாக கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், இந்த அரச வன்முறையை உடனடியாக நிறுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரச வன்முறையின் பிதாமகன்கள் யார் என்பதை முழு நாடும் அறியும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.