இன்று (01) முதல், சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் புதிய வரி அமுல்படுத்தப்படுகின்றது. குறித்த வரியின் மூலம், 140 பில்லியன் மேலதிக
வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வரி விதிப்பினால், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மேலும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளதுடன், இவ்வாறான வரிகள் அரசாங்கத்திற்கான வருமானத்தை ஈட்டுவதற்கு தற்காலிகமாக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்