பாரியளவில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி மற்றும் அவரது காதலர் என்று தெரிவிக்கப்படும் இசுரு பண்டார ஆகியோரை விளக்கமறியலில் வைப்பதற்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஸ்கைப் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவர் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதனடிப்படையில், சந்தேக நபர்கள் இருவரையும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.