சம்மாந்துறை பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் (பாதீடு) பிரிவினையின்றி  நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபையின் 57 ஆவது அமர்வு சம்மாந்துறை‌ தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் சபா மண்டபத்தில் இன்று செவ்வாய்கிழமை (15) இடம்பெற்றது.

இதன்போது வழமையான சபை நடவடிக்கையை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரினால் சம்மாந்துறை பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்பட்டது. இவ்வரவு செலவுத்திட்டத்தினை பிரதேச சபையின் உறுப்பினர் ஐ.எல்.எம் மாஹிர் அவர்களினால் அமோதித்து பிரிவினையின்றி நிறைவேற்றப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 20 உறுப்பினர்களை கொண்ட சபையின் வரவு செலவுத் திட்டம் பிரிவினையின்றி நிறைவேற்றப்பட்டது.

இவ்வரவு செலவுத் திட்டமானது சம்மாந்துறை பிரதேச மக்களின் பங்களிப்புடன் தேவைகளையும், நலனையும் முன்னுரிமைப்படுத்தி, மக்களின் கருத்துக்களையும், உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் உள்ளடக்கிய வரவு செலவுத்திட்டம் என்பதனால்  வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.